தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று மாலை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பறங்கியாற்றுப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்று அதிகாலை வேளையில் பறங்கியாற்றுப் பகுதிக்குச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த குடும்பத்தினர், அயலவர்களுடன் இணைந்து அப்பகுதி முழுவதும் தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது, ஆற்றினுள் குறித்த நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் காவல் துறைக்கு.தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த நபர் தற்செயலாக ஆற்றில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் (Electric Trap) சிக்குண்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்தில்  காவல் துறை.தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் மீதான மரண பரிசோதனை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் காவல்துறையினர்.மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment